குடியரசு தினம்
வந்தது வந்தது நல்லது வந்தது
வந்தது நல்லது தானே
சுதந்திரம் வந்தது தானே
இதை நிந்தனை செய்யாது
நித்தமும் நாடிடு
சந்தத் தமிழ் தனில் தேனே
ஆண்ட அவர் சென்றார்
அடுத்தது யோசிக்க வேண்டும்
மன்னர்கள் இல்லை
மக்கள் தான் மன்னர்
என்று நாம் மாறி விட்டோம்
எம்மை நாம் மாற்ற வேண்டும்
எப்படி நம்மை நாம் ஆள்வது
என்று நாம் யோசிக்க வேண்டும்
சட்டங்கள் வேண்டும்
திட்டங்கள் வேண்டும்
சகலத்திற்கும் ஆணைகள் வேண்டும்
சராசரி பார்க்க வேண்டும்
சாலை விதிகள் வேண்டும்
சமமாய் நடத்த வேண்டும்
கல்விக்கும் கல்யாணத்திற்கும்
கடமைக்கும் கலைக்கும்
கட்டாயம் கருவிகள் வேண்டும்
கண்காணிப்பும் வேண்டும்
இத்தனையும் எழுதப்பட வேண்டும்
எழுத்து ஆணையாய்ப் பிறக்க வேண்டும்
அறிவு ஆணையை எழுத வேண்டும்
அதை அறிஞர் ஆதரிக்க வேண்டும்
அனைவரின் எண்ணமே ஆட்சியாகும்
அதுவே ஜனநாயகம் ஆகும்
அப்படி எழுதிட ஆகிடும் வருடம்
ஆனதே வருடங்கள் மூன்று .
நாற்பத்தி ஏழில் வந்த சுதந்திரம்
ஐம்பதில் அமலுக்கு வந்தது
அதுவே நம் நாட்டு குடியரசு
நம் வாழ்வின் திருவின் அரசு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.