நான் பிறந்த கதை சிறிது
சின்னஞ் சிறிய கொட்டை
என் வீரியக் கதிர் அதில்
அது வெடித்துச் சிதறியதால்
என் உயிர் ஓர் உடல் பெற்றது
வான் தந்த சில சொட்டுகளில்
வளர்ந்தேன் வளர்பிறையாய்
பச்சையாய்ப் பரவினேன்
பாரை வளைக்க யோசித்தேன்
பக்கத்தில் இருந்த பகாசுரன்
பழைய கட்டிடம் பார்த்தேன்
சும்மாய் சுமையை இருந்தது
சுயமாய் யோசித்து ஆராய்ந்தேன்
சுலபமாய் வீழ்த்தலாம் இதை
சுளுவாய் என் வேர்களை விட்டேன்
முறித்தன அவை எலும்புகளை
முதுகெலும்பை நொடித்தன
அத்தனை கற்களும் என் கீழ்
அறிவியலை அடக்கினேன்
கான்க்ரீட் தகர்ந்தது கனவாய்
கணக்குகள் பொய்த்தன மெதுவாய்
எங்கும் என் பச்சை இலைகள்
யாதுமாகி நின்றன ஆங்கே
யாரோ பேசினார் என் காதுகேட்க
'இந்த ஆலமரம் மோசம்
இந்தக் கட்டிடத்தை உடைத்து
இடத்தையே காலி பண்ணி
நாசம் செய்துவிட்டது'
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.